/indian-express-tamil/media/media_files/2025/04/23/LeRAXyZOvp5mNPDL8gWj.jpg)
Chennai Airport- Kilambakkam Metro Project
சென்னைமீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தமிழக அரசிடம் சமா்ப்பித்த நிலையில், இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது
9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டில்செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இதற்கான நிதிப்பரிவுக்காக திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.