Advertisment

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட கொக்கைன்...கென்ய பெண்ணிடம் இருந்து ரூ. 14.2 கோடி மதிப்புள்ள கேப்சூல்கள் பறிமுதல்

கென்யா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட கொக்கைன் கேப்சூல்களை விமான நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.

author-image
WebDesk
New Update
கொக்கைன்

கடத்தி வரப்பட்ட கொக்கைன்

சென்னை விமான நிலையத்தில் ரூ.14.2 கோடி மதிப்புள்ள 1.24 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த கென்யாவை சேர்ந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisment

2 நாட்களுக்கு முன்பு அடிஸ் அபாபாவில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில், சுற்றுலா விசாவில் சென்னை வந்த 35 வயது தக்க கென்ய பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் போது அந்தப் பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாலும் அவருடைய வயிறு விசித்திரமாக இருந்ததாலும் போலீசார் சந்தேகம் அடைந்ததாக தெரிவித்தனர்.  

இதையடுத்து, அந்த பெண்ணை ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றபோது, அவர் பல காப்ஸ்யூல்களை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கேப்ஸ்யூல்களை அகற்றும் பணி 2 நாட்களாக நடந்து வந்தது.

Advertisment
Advertisement

வயிற்றில் இருந்து மொத்தம் 90 காப்ஸ்யூல்கள் அகற்றப்பட்டன, ஒவ்வொரு காப்ஸ்யூலிலும் கொக்கைன் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 14.2 கோடியும் 1.24 கிலோ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சர்வதேச கடத்தல் கும்பல் தன்னை அனுப்பியதாக அந்த பெண் தெரிவித்தார். அந்த பெண் மும்பை, டெல்லி மற்றும் இந்தியாவின் பிற முக்கிய  நகரங்களுக்கு பலமுறை சென்றிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள், கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Smuggling Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment