சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை – ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்

யூடியூபர் சவுக்கு சங்கரை பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியபோது, பொதுமக்களுக்கு இடையூறோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னையோ ஏற்படவில்லை – சென்னை, மதுரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம்

யூடியூபர் சவுக்கு சங்கரை பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியபோது, பொதுமக்களுக்கு இடையூறோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னையோ ஏற்படவில்லை – சென்னை, மதுரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம்

author-image
WebDesk
New Update
 savukku.jpg

யூடியூபர் 'சவுக்கு' சங்கரை இந்த ஆண்டு மே மாதம், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்காக பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியபோது, பொதுமக்களுக்கு இடையூறோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னையோ ஏற்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மற்றும் மதுரை நகர காவல் துறையினர் தெரிவித்தனர். 

Advertisment

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது துடைப்பத்தை வீச பெண் போராட்டக்காரர்களைத் திரட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் தனித்தனி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் யூடியூபர் சவுக்கு சங்கரை பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியபோது, பொதுமக்களுக்கு இடையூறோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னையோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், நீதிமன்றத்துக்கு முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

கிரிமினல் வழக்கு ஒன்று தொடர்பாக எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்படும் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் இருந்து மே 23 ஆம் தேதி மெமோ வந்ததாக எழும்பூர் இன்ஸ்பெக்டர் திருமால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க நுங்கம்பாக்கம் ரேஞ்ச் காவல் உதவி ஆணையர், 3 காவல் ஆய்வாளர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 21 போலீஸார் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சவுக்கு சங்கர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதை காவல்துறை குழு உறுதி செய்தது, என்று இன்ஸ்பெக்டர் திருமால் கூறினார்.

மதுரை நகர அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீ தாமரை விஷ்ணு தனது அறிக்கையில், ”சவுக்கு சங்கரை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர் யூடியூப் பேட்டியில் பெண் காவலர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, எதிர்பாராதவிதமாக சில பெண்கள் போராட்டக்காரர்கள் கூடி அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அண்ணா நகர் ரேஞ்ச் போலீஸ் உதவி கமிஷனர், உடனடியாக காவல்துறையினர் மூலம், அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார். பொது இடையூறு எதுவும் நடக்கவில்லை,” என்று தெரிவித்தார். 

நிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, பொதுநல மனு மீதான விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு டிவிஷன் பெஞ்ச் ஒத்திவைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madras High Court Chennai Madurai Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: