Advertisment

சென்னை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
Sep 07, 2023 23:37 IST
Secretariat I

சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கூறியிருப்பதாவது: “அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக இருந்த டாக்டர் நந்தகோபால் ஐ.ஏ.எஸ் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு கூட்டுறவு மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளராக இருந்த ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐ.ஏ.எஸ் சென்னை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா ஐ.ஏ.எஸ் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 



நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.பி. அம்ரித் ஐ.ஏ.எஸ் நில நிர்வாகத்துறையின் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படோர், சிறுபான்மையினர் நிலத்துறை சிறப்பு செயலாளர் ஹனிஷ் சாப்ரா ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Nilgiris #Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment