/tamil-ie/media/media_files/uploads/2021/06/auto.jpeg)
Covid vaccination awareness : கொரோனா குறித்தும் கொரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே தற்போதைய கடுமையான சூழலில் இருந்து மக்களை காக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த கௌதம் என்ற கலைஞர், ப்ளாஸ்டிக் பைப்கள் மற்றும் பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.
தடுப்பூசி உயிர்காக்கும் என்று ”வைல்”-ஐ பிரதிபலிக்கும் வகையிலான ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவை ஆட்டோவின் மீது வைத்துள்ளார். இந்த ஆட்டோ முழுக்க முழுக்க இளநீல நிறத்தால் வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஆட்டோவின் முகப்பு மற்றும் பின்பக்கங்களில் தடுப்பூசிகள் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இது போன்ற படைப்பினை உருவாக்கி வரும் கௌதம் ஏற்கனவே கொரோனா ஹெல்மெட் மற்றும் கொரோனா கருவிகள் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டும் மக்கள் மத்தியில் இது நிச்சயம் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் என்று கௌதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.