இனி எல்லை தாண்டி ஓட்டலாம்... சென்னை ஆட்டோக்களின் பர்மிட் நீட்டிப்பு!

சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சி.எ.ம்.டி.ஏ வரை நீட்டித்து போக்குவரத்து துறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சி.எ.ம்.டி.ஏ வரை நீட்டித்து போக்குவரத்து துறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Chennai Auto permit limits expanded to CMDA Tamil News

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் வரை சென்னை அனுமதி பெற்று ஆட்டோக்களை இயக்க முடியும்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Chennai:சென்னை எழும்பூரில் 'நம்ம யாத்ரி' என்ற புதிய ஆட்டோ செயலி தொடக்க விழா நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் சி.எம்.டி.ஏ. எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தார். 

Advertisment

இந்நிலையில், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் அறிவிவிப்பின் படி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை அண்டை மாவட்டங்களிலும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் வரை ஆட்டோக்களை இயக்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட எல்லைகளைத் தாண்டி ஆட்டோக்கள் இயக்கப்படும்போது அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கான எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால், எல்லைத் தாண்டியதாக ஆட்டோக்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: