New Update
/indian-express-tamil/media/media_files/sLtL8Jh2vngf0AbAfOcb.jpg)
தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Chennai | train: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (29.11.2023) முதல் டிசம்பர் 14 ஆம் தேதி (14.12.2023) வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மார்க்கத்தில் இயக்கப்படும் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (29.11.2023) முதல் டிசம்பர் 14 ஆம் தேதி (14.12.2023) வரை, நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மார்க்கத்தில் இயக்கப்படும் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.