Advertisment

சென்னை டூ பெங்களூர்- 2.5 மணி நேரத்தில் பயணம்: அதிவேக ரயில் தொடர்பான முக்கிய தகவல்

சென்னை, பெங்களூரு, மைசூரை இணைக்கும் அதி வேக ரயில் விரைவில் செயல்பட தொடங்க உள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து மைசூருக்கு செல்ல 2 மணி 25 நிமிடங்களே போதுமானது.

author-image
WebDesk
New Update
sasaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 சென்னை, பெங்களூரு, மைசூரை இணைக்கும்  அதி வேக ரயில் விரைவில் செயல்பட தொடங்க உள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து மைசூருக்கு செல்ல 2 மணி 25 நிமிடங்களே போதுமானது.

Advertisment

சென்னை – பெங்களூரு- மைசூர் அதிவேக ரயில் திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூர் செல்ல 2 மணி நேரம் 25 நிமிடங்களே தேவைப்படும். தற்போது வந்தே பாரத் ரயிலில் பயணித்தால்  6 மணி நேரம் 30 நிமிடங்களில் பெங்களூருக்கு செல்லலாம்.

இந்த ரயில் வழி தடத்தில் 9 நிறுத்தங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம் ,  சித்தூர், பங்காரபேட், பெங்களூரு, சென்னப்பட்ணா, மண்டையா, மைசூர் நிறுத்தங்களில் நின்று செல்லும்.

இந்த திட்டத்தை செயல்முறைபடுத்துவதற்கான கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாதையில் ரயில் பாலம் அமைத்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள். அதற்கான மாற்று வழி குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது. தொழில் ரீதியாக பல்வேறு முன்னேற்றங்கள், அதி வேக ரயில் மூலம் சாத்தியப்படும் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment