/tamil-ie/media/media_files/uploads/2018/07/kandanchavadi-building-collapse.jpg)
சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் நடந்த கட்டிட பணியின்பொழுது தூண் மற்றும் சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 19 பேர் மீட்பு. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
சென்னை கந்தன்சாவடி அருகே உள்ள மருத்துவமனைக்கு சொந்தமான இடம் ஒன்றில் கட்டிட பணி நடைபெற்று வந்தது. கட்டிடம் நடக்கும் இடத்தில், நேற்று எதிர்பாராத விதமாக ஜெனரேட்டர் வைக்க அமைக்கப்பட்டிருந்த தூண் மற்றும் இரும்பு சாரம் சரிந்து விழுந்தது. இதில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கொட்டகையின் கீழ் இருந்த 35 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 35 பேரில் 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஒருவர் மூச்சு திணறி பலியான நிலையில் மீட்கப்பட்டார். விபத்தில் பலியானவர் பிகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட 19 பேரில் 3 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொறியாளர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.