ஒடிசா டூ திருச்சி ரயிலில் வந்த கஞ்சா; சென்னையில் வாலிபர் கைது

ஒடிசாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது; சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

ஒடிசாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது; சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy Ganja arrest

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலைத்தின் 9-வது நடைமேடைக்கு வந்தடைந்தது.

Advertisment

இந்த ரயிலில் இறங்கி சென்ற பயணிகளை ரயில்வே போலீஸார் கண்காணித்தபோது, ஒரு இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து, அவரது பைகளை சோதித்த போது, அதில் 15 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம். இதையடுத்து, அவரை பிடித்து, ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் திருச்சியைச் சேர்ந்த சரண்ராஜ் என்பதும், ஒடிஸாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும், திருச்சிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

க.சண்முகவடிவேல்

Chennai Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: