சென்னை செண்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு நள்ளிரவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. காலியாக சென்ற ரயில் எஞ்சினின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு கிழே இறங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் உடனுக்குடன் சீரமைப்புப் பணி நடைபெற்றது.
ரயில் தடம்புரண்ட இடத்தில் நள்ளிரவு 1.15 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் தடம் புரண்ட இஞ்சினை ஊழியர்கள் சரி செய்தனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“