Chennai City Highlights: அஜித் குமார் குடும்பத்தினருடன் ஸ்டாலின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம் - இ.பி.எஸ் கடும் தாக்கு

Tamilnadu News Live Updates (July 01): இன்றைய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates (July 01): இன்றைய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith issue

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு: சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில், இந்த மாதம், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.58.5 குறைந்து ரூ.1,822.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • Jul 01, 2025 21:18 IST

    டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிப்பு

    டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க விதிக்கப்பட்ட தடை, இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, முதல் நாளான இன்று தடை மீறியதாக 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



  • Jul 01, 2025 20:24 IST

    அஜித் குமார் குடும்பத்தினருடன் ஸ்டாலின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம் - இ.பி.எஸ் கடும் தாக்கு

    அஜித் குமார் சம்பவத்தில் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, "நடக்கக் கூடாதது நடந்துடுச்சு என்று சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

     



  • Advertisment
    Advertisements
  • Jul 01, 2025 19:18 IST

    பார் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு

    பார் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ்பாபு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.



  • Jul 01, 2025 19:18 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவு - ஒருவர் கைது

    கடந்தாண்டு கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னையை அடுத்த திருமழிசை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • Jul 01, 2025 18:41 IST

    பா.ஜ.க அரசுக்கு துணை போகும் கட்சிகளை வீழ்த்துக - ஆ.ராசா எம்.பி. பேச்சு 

    தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாஜக அரசுக்கு சில கட்சிகள் துணை போகின்றன என ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் தோள் கொடுத்து நிற்பதாகவும், பாஜக அரசுக்கு துணை போகும் துரோகிகளை வீழ்த்தி தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவுக்காக அல்ல, ஓட்டுமொத்த தமிழ்நாட்டையும் காப்பதற்காகவே என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.



  • Jul 01, 2025 18:28 IST

    பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல செய்தி. பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுலாவையும் அதிகரிக்கும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Jul 01, 2025 18:26 IST

    ஊக்கத்தொகை திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    ELI ஊக்கத்தொகை திட்டம் மூலம் முதன்முறை  பணியில் சேர்வோருக்கு ரூ.15,000 மானியம் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து முறைசார் துறைகளிலும் முதல் முறையாக பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் மானியம். ரூ.15,000 வரை இரண்டு தவணைகளாக நேரடி 
    பண பரிமாற்றம் மூலம் பணியாளர்களுக்கு வழங்கப்படும்



  • Jul 01, 2025 18:25 IST

    ஐபிஎஸ் அதிகாரியின் இடைநீக்கம் செல்லாது: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் 

    கர்நாடகாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,  பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டில் ஐபிஎஸ் அதிகாரி விகாஷ் குமார் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,"உரிய ஆதாரங்கள், விசாரணை இன்றி இடைநீக்கம் செய்வது தவறு, விகாஷ் குமார் உடனடியாக பணியை தொடர கர்நாடக அரசு அனுமதிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயம்  கூறியுள்ளதுர்.



  • Jul 01, 2025 18:24 IST

    ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி துப்பாக்கிமுனையில் கைது|

    பிரபல ரவுடி நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளியான வெள்ளை பிரகாஷ் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எருக்கஞ்சேரியில் நடந்து சென்றவரிடம் பணம் பறித்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெள்ளை பிரகாஷ் மீது வழக்குப்பதிவு; கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



  • Jul 01, 2025 18:23 IST

    அஜித்குமார் குடும்பத்துக்கு முதல்வர் ஆறுதல்

    போலீஸ் விசாரணையின்போது  உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமாரின்  குடும்பத்திற்கு செல்போனில் தொடர்புகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.



  • Jul 01, 2025 18:22 IST

    வனச்சட்ட திருத்தம் மசோதா - ஆளுநர் ஒப்புதல்

    தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவை அப்போதைய வனத்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் கடந்த ஜன.11ஆம் தேதி தாக்கல் செய்தார். சட்ட மசோதா அன்றைய தினமே பேரவையில்  நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பு



  • Jul 01, 2025 17:22 IST

    இளம்பெண் தற்கொலை - சந்தேக மரணமாக வழக்குப்பதிவு

    சென்னையை அடுத்த பொன்னேரியில் திருமணமான இளம்பெண் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை. 1 சவரன் தங்கம் தரவில்லை என்பதற்காக 
    வரதட்சணை கொடுமை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சடலம் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில்  பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வரதட்சணை கொடுமை மட்டுமே காரணமா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரிக்க பரிந்துரை செய்யபட்டுள்ளது.



  • Jul 01, 2025 16:18 IST

    அண்ணாமலையிடம் விசாரணை கோரிய மனு தள்ளுபடி

    அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி அளித்த அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஞானசேகரன் யார் யாரிடம் போனில் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சொன்ன அண்ணாமலை, அவற்றை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கவில்லை என்றும் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதிகள், அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு கோர்ட்டு பதிலளிக்க வேண்டுமா? இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என தெரிவித்துள்ளது.



  • Jul 01, 2025 16:05 IST

    ஆர்.என். ரவி டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்க திட்டம்

    கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லிக்கு ஒருநாள் பயணமாக சென்று வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது 4 நாள் பயணமாக மீண்டும் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 8.55 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஒரே வாரத்தில், 2-வது முறையாக கவர்னர் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் பயணத்தில் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. 



  • Jul 01, 2025 15:35 IST

    அஜித் மரண வழக்கில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை: ரகுபதி

    இளைஞர் அஜித் மரண வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் அஜித் மரண வழக்கிலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.



  • Jul 01, 2025 14:55 IST

    திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு - ஸ்டாலின் உத்தரவு

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் - ரூ.5 லட்சமாக உயர்வு. பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாயும், ஆண்களுக்கு 6,000 ரூபாயும் திருமண முன்பணம் வழங்கப்பட்ட நிலையில் பலமடங்கு உயர்த்தி அறிவிப்பு. தேவையின் அடிப்படையில் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன்பணம்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் ஏற்கெனவே அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 



  • Jul 01, 2025 14:30 IST

    தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். சென்னையில் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 14:12 IST

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



  • Jul 01, 2025 13:26 IST

    சிவகங்கை இளைஞர் லாக் அப் மரணம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக் அப் மரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.



  • Jul 01, 2025 13:18 IST

    ‘ஒன்றிய பா.ஜ.க அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது’ - ஸ்டாலின்  குற்றச்சாட்டு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி: “எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை; ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது. அரசியல், பண்பாடு, மொழி என அனைத்திலும் ஒன்றிய பா.ஜ.க அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.



  • Jul 01, 2025 12:34 IST

    சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு - சென்னை மாநகராட்சி உத்தரவு

    சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, கட்டிடங்களின் வகையைப் பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண குடியிருப்பு கட்டிடங்களுக்கான அபராதம் ரூ.10,000 ஆகவும், சாதாரண வணிக கட்டிடங்களுக்கு ரூ.25,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.50,000 மற்றும் சிறப்பு வணிக கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.2 லட்சமும், அடுக்குமாடி வணிக கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அபராத விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Jul 01, 2025 12:30 IST

    சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி உத்தரவு

    சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதத்தை உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கட்டடங்களின் வகைகளை பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

    மாநகராட்சி சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதம் - ரூ.10,000  

    சாதாரண வணிக கட்டடங்களுக்கு ரூ.25,000 

    சிறப்பு குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.50,000 

    சிறப்பு வணிக கட்டடங்களுக்கு ரூ.1 லட்சம் 

    அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.2 லட்சம்  

    அடுக்குமாடி வணிக கட்டடங்களுக்கு ரூ.5 லட்சம்



  • Jul 01, 2025 11:33 IST

    ‘வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.

    நான் முதல்வன் திட்ட த்தின் மூலம் ‘வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாட்டில் 18- 35 வயதுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்க திட்டம்



  • Jul 01, 2025 09:48 IST

    கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான்- சித்தராமையா

    கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னடம், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைதான் கர்நாடக பின்பற்றுகிறது என அவர் தெரிவித்தார்.



  • Jul 01, 2025 09:17 IST

    தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்

    ஜூலை 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலியில், ஆதார் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே இன்று முதல் இருந்து 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.



  • Jul 01, 2025 09:11 IST

    ”குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை”

    தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம், கைதறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த ஆலைக்கு மின்சார மானியம் தொடரும். வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.



  • Jul 01, 2025 09:10 IST

    அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வி.பி.சிங் பிறந்த மண்ணில் சமுக நீதி விளக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல வாழ்த்துக்கள் என தனது சமுக வலைதள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



  • Jul 01, 2025 08:59 IST

    ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினம்: வாகன தணிக்கை

    ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெரம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் 5 இடங்களில் 24 மணி நேரமும் வாகன தணிக்கை நடைபெறுகிறது. பெரம்பூர் பாலம் அருகே மின் கண்ட்ரோல் ரூம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 8 இடங்களில் ஒரு உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் நின்று பாதுகாபு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Jul 01, 2025 08:58 IST

    தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்

    தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம், கைதறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த ஆலைக்கு மின்சார மானியம் தொடரும். வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.



  • Jul 01, 2025 08:38 IST

    உணவு டெலிவரிபாய் கொலை வழக்கில் ரவுடி சரவணன் கைது

    சென்னை அசோக் நகரில் உணவு டெலிவரி பாய் கலையரசன் கொலை வழக்கில், ரவுடி சரவணன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கே.கே.நகர் கதிரவனை கொன்ற வழக்கில் இவர் தொடர்புடையவர் எனத் தெரிகிறது. 



  • Jul 01, 2025 08:34 IST

    ”மாற்றுத் திறனாளிகள் நியமன பதவிக்கு விண்ணப்பிக்கலாம்”

    தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம். 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025 –ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (i-a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி/ நகராட்சி/மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 17-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



  • Jul 01, 2025 08:01 IST

    அரசுப் பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் இன்று முதல் அமல்

    நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் பொருட்டு, மாணவா்கள் தினமும் மூன்று முறை தண்ணீா் அருந்தும் வகையில் ‘வாட்டா் பெல்’ திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திங்கள்கிழமை (ஜூன்30)முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தின்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டா் பெல்’அடித்து மாணவா்களை தண்ணீா் அருந்த அறிவுறுத்த வேண்டும். இதற்காக வகுப்பறைகளை விட்டு மாணவா்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே தண்ணீா் அருந்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவா்கள் தண்ணீா் அருந்துவதற்கு 5 நிமிஷங்கள் ஒதுக்கச் செய்ய வேண்டும்.



  • Jul 01, 2025 07:56 IST

    ரசாயன ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 34ஆக அதிகரிப்பு

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயிரிழந்துள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



  • Jul 01, 2025 07:39 IST

    கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை - அரசாணை

    2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.297 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ‘கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



  • Jul 01, 2025 07:37 IST

    சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

    சென்னையில் 01.07.2025 அன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தாம்பரம் செம்பாக்கம் நூத்தஞ்சேரி மெயின் ரோடு, மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பாரீஸ் ஆதித்யா நகர், நூத்தன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிநாதபுரம், வாதாபி நகர் ,சபாபதி நகர், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, கோமாதி தெரு, வைகை தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு, நேதாஜி தெரு, ஐயப்பா நகர் 1 முதல் 7வது தெரு, இபி காலனி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், எஎல்எஸ் பசுமை நிலம், பெரியார் நகர், லட்சுமி நகர், கொம்மி அம்மன் நகர், கக்கன் தெரு ஆகிய இடங்கள் ஆகும்.



  • Jul 01, 2025 07:28 IST

    இளைஞர் மரணம்: கைதான 5 போலீசாருக்கு 15 நாள் காவல்

    திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் போலீசார் ஆஜர் செய்தனர். இதனையத்தொடர்ந்து 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்



  • Jul 01, 2025 07:23 IST

    6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 07:11 IST

    நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    500 கிலோ மீட்டருக்கு மேலான தூர பயணங்களுக்கு ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. முன்பதிவில்லா சாதாரண பெட்டிகளுக்கு 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை. 501 கிலோ மீட்டரில் இருந்து 1,500 கிலோ மீட்டர் வரை ரூ.5-ம், 1,501 கிலோ மீட்டரில் இருந்து 2,500 கிலோ மீட்டர் வரையில் ரூ.10-ம், 2,501 கிலோ மீட்டரில் இருந்து 3,000 கிலோ மீட்டர் வரையில் ரூ.15-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும், முதல் வகுப்பு பெட்டிகளுக்கும் கிலோ மீட்டருக்கு ½ பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 07:10 IST

    ஒகேனக்கல் காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டடுள்ளது.



  • Jul 01, 2025 07:09 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 7 பேர் சிறைபிடிப்பு

    இன்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். ஆரோக்கியா டேனியல் என்பவரின் படகில் இருந்த மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Chennai Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: