Advertisment

மருந்து கடைகளில் சி.சி.டி.வி கட்டாயம்; சென்னை ஆட்சியர் உத்தரவு

மருந்து கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
medical shop

மருந்து கடை (பிரதிநிதித்துவ படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

சமீபகாலமாக, மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போதை மாத்திரைகளை இளைஞர்களும், மாணவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும், மருந்து கடைகளில் இருந்து பெறப்பட்ட சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் -1940 மற்றும் 1945 அட்டவணை “X “H”,“H1மருந்துகள் குறிப்பிட்டுள்ள மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறும்பட்சத்தில் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment