சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்திருப்பது இதுவே முதல்முறை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சி ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்துள்ளது. சென்னை மாநகராட்சி ரூ.2000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்திருப்பது இதுவே முதல் முறை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.1733 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்ட நிலையில், 2024 -25-ல் ரூ.2750 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30-க்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.