Advertisment

சிங்கார சென்னை 2.0 ‘வீதி விழா’ சவாலில் பங்கேற்க சென்னைவாசிகளுக்கு அழைப்பு

சவாலில் பங்கேற்பதற்காக, நகரவாசிகள் ஸ்ட்ராவா செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, https://www.allforsport.in/challenges/challenge என்ற URLஐப் பயன்படுத்தி ‘ஆல் ஃபார் ஸ்போர்ட்ஸ்’ என்பதன் கீழ் பதிவு செய்யலாம்.

author-image
WebDesk
New Update
சிங்கார சென்னை 2.0 ‘வீதி விழா’ சவாலில் பங்கேற்க சென்னைவாசிகளுக்கு அழைப்பு

Chennai corporation invites people to participate Veedhi vizha challenge: இந்த புத்தாண்டில், சிங்கார சென்னை 2.0 இன் கீழ் 'வீதி விழா' சவாலின் மூலம், அதிக நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி ஒரு படி முன்னேற, சென்னைவாசிகளை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதுவரை, 828 சென்னைவாசிகள் சைக்கிள் ஓட்டுவதற்கும், 316 பேர் நடைபயிற்சி சவாலுக்கும் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சவால் புத்தாண்டு அன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜனவரி 26 வரை தொடர்ந்து நடைபெறும். மொத்தம் 75 இந்திய நகரங்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. எந்த நகரத்தில் வசிப்பவர்கள் அதிக கிலோமீட்டர்களை கடக்கிறார்களோ, அந்த நகரம் சவாலில் வெற்றி பெறும். சென்னை நகரம் வெற்றி பெற சென்னைவாசிகள் அதிக கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும்.

"ஒரு நகரம் வெற்றிபெற, அந்த நகரவாசிகள் நடந்த, ஓடிய அல்லது சைக்கிள் ஓட்டிய ஒட்டுமொத்த கிலோமீட்டர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், சென்னையில் இருந்து அதிக தூரத்தை கடந்த 10 பங்கேற்பாளர்களைக் கண்காணிக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம், அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள், ”என்று திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதிகாரி கூறினார்.

சவாலில் பங்கேற்பதற்காக, நகரவாசிகள் ஸ்ட்ராவா செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, https://www.allforsport.in/challenges/challenge என்ற URLஐப் பயன்படுத்தி ‘ஆல் ஃபார் ஸ்போர்ட்ஸ்’ என்பதன் கீழ் பதிவு செய்யலாம். 'ஆல் ஃபார் ஸ்போர்ட்ஸ்' பக்கத்திலிருந்து, பயனர்கள் தங்கள் ஸ்ட்ராவா கணக்கை இணைக்கலாம் மற்றும் அவர்கள் கடந்து வந்த தூரம் தானாகவே பதிவு செய்யப்படும்.

"பொதுமக்கள் எவ்வளவு முன்னதாகப் பதிவு செய்கிறார்களோ, அவ்வளவு சிறந்தது, ஏனென்றால் அவர்கள் அதிக கிலோமீட்டர்களைக் கடக்க நேரம் கிடைக்கும், ஆனால் அவர்கள் தாமதமாக பதிவு செய்ய விரும்பினாலும், அதுவும் நல்லது. முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைப்பயணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

சென்னை மாநகராட்சி பெண்கள் சைக்கிள் ஓட்டுவதற்கு ஊக்குவித்து வருகிறது. மேலும், சிறு குழுக்களாக பெண்களை இரவில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவித்து, குறிப்பாக இரவுகளில் பெண்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தை நகரவாசிகளிடையே அறிமுகப்படுத்துகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment