Advertisment

செல்லப் பிராணிகளை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை மாநகராட்சியின் நான்கு நாய்கள் காப்பகங்களில் ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவற்றில் 1,700 நாய்களுக்கு மட்டுமே உரிமம் உள்ளது.

author-image
WebDesk
Jun 09, 2023 20:31 IST
Pets

Representative Image

சென்னைவாசிகள் இப்போது தங்கள் செல்லப்பிராணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்வதன் மூலம் ஆன்டோரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் பிற ஊசி போன்ற இலவச சேவைகளைப் பெறலாம்.

Advertisment

"ஒரு கால்நடை மருத்துவர் பதிவு செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று செல்லப்பிராணியை பரிசோதிப்பார். ஏழு நாட்களுக்குள் செல்லப்பிராணி உரிமம் வழங்கப்படும்" என்று மேயர் ஆர்.பிரியா வியாழக்கிழமை தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் ஜே ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் நான்கு நாய்கள் காப்பகங்களில் ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவற்றில் 1,700 நாய்களுக்கு மட்டுமே உரிமம் உள்ளது.

குடியிருப்பாளர்கள் http://117.232.67.158:8061/login பார்வையிடலாம் மற்றும் 50 ரூபாய் செலுத்தி தங்கள் செல்லப்பிராணிகளைப் பதிவு செய்யலாம்.

சென்னை மாநகராட்சி நாய்கள் காப்பகங்கள் திரு.வி.கா நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இடங்களில் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment