Advertisment

வெப்பம் அதிகரிப்பு... நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி, வெயில் வெப்பத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.

author-image
WebDesk
New Update
heatwave survival guide

சென்னையில் உள்ள மக்கள் வெயில் வெப்பம் அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் வெயில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, வெயில் வெப்பத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. 

Advertisment

வெயிலின் வெப்பத்தால் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படும்; 188 இடங்களில் வாய்வழி நீரேற்றம் கரைசல் அளிக்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள மக்கள் வெயில் வெப்பம் அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கோடை வெயிலின் வெப்பத்தால் பாதிப்பு மற்றும் பிற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான வழிகாட்டி பலகைகளை பெருநகர சென்னை மாநகராட்சி அமைக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 29) மருத்துவமனைகளில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், வெயிலின் வெப்பம் தணியாததைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியின் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதாரம் மற்றும் நல மையங்கள் மற்றும் இதர மருத்துவமனைகளில், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், வெயிலின் தாக்கம் அல்லது வெப்பம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட்டால், மருத்துவ உதவி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

“நகரில் 188 இடங்களில் வாய்வழி ரீஹைட்ரேஷன் கரைசலை வழங்கியுள்ளோம். நோயுற்ற நிலையில் உள்ள நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். மதியம் முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து வெயிலின் வெப்ப தாக்கத்தை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வெளியே செல்லும்போது, கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும், மிகவும் வெப்பமாக இருக்கும் போது வெளியே செல்ல விரும்பினால் தலையை மூடிக்கொள்ளுங்கள், அல்லது தலைப்பாகை அணிந்துகொள்ளுங்கள், குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தடுக்க வேண்டும்” என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment