தமிழ்நாட்டில் உள்ள மகளிருக்கு ரூ.1000 நிதியுதவி உரிமைத் தொகை நிதியுதவி திட்டம் வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார்.
இந்த வாக்குறுதியின்படி ரூ.1000 மாதாந்திர நிதியுதவி திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், “பெண்களுக்கான ரூ.1,000 மாதாந்திர உதவித் திட்டத்திற்கு (கலைஞர் மகளிர் உரிமை திட்டம்) 9,08,380 விண்ணப்பங்கள் சென்னை மாநகராட்சிக்கு வந்துள்ளன” என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, பயனாளிகளை அடையாளம் காணவும், பட்டியலை இறுதி செய்யவும் குடிமைப் பிரிவு கடந்த இரண்டு வாரங்களாக முகாம்களை நடத்தியது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு முன் எந்த இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டதோ, அதே இடங்களில் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“