அனுமதி பெற்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி

தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்த தடையுமில்லை. அனுமதியோடு போராட்டம் நடத்தி காவல்துறை தடுத்தால் தலையிட முடியும். தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெறவில்லை எனத் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்த தடையுமில்லை. அனுமதியோடு போராட்டம் நடத்தி காவல்துறை தடுத்தால் தலையிட முடியும். தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெறவில்லை எனத் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai high court 2x

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாகத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று (ஆக. 13) இரவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கைது செய்து, தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்கவைத்துள்ளனர்.

Advertisment

இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. 

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில், வக்கீல்கள் ரமேஷ், வேல்முருகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதுசம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

Advertisment
Advertisements

இது தொடர்பான கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை பிற்பகல் விசாரணை எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

முன்னதாக, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும் போது கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதிலும், அவர்கள் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதனால் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும். இந்த விவகாரத்தில் எந்த மனுவும் இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: