/indian-express-tamil/media/media_files/2025/09/11/sanitary-worker-hc-2025-09-11-18-13-39.jpg)
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய இந்த வழக்கில், 3 வாரங்களுக்குள் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறையினர் மனித உரிமை மீறல் செய்ததாக ஜோதி உள்ளிட்ட 12 பேர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது, நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி காவல்துறையினர் அத்து மீறியதாகவும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் ஜோதி உள்ளிட்ட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (10.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என தூய்மை பணியாளர் தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய இந்த வழக்கில், 3 வாரங்களுக்குள் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.