சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், சென்னையில் உள்ள கோவில் குளங்களை தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நீர் நிலைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஒரு குறிப்பிட்ட பங்கை கோவில் குளங்களை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மைலாப்பூரின் சித்திரக் குளம், மாம்பலத்தில் உள்ள கொத்தண்டராமன் குளம், வளசரவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள குளம் ஆகியவை தூர்வாரப்பட உள்ளது.
குறிப்பாக வளசரவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை தூர்வார ரூ. 2.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியின் முதன்மை பொறியியலாளர் கூறுகையில், “ மழைக் காலங்களில், இந்த குளங்கள் நிறைந்துவிடும். அப்பகுதியில் உள்ள மாநகராட்சி ஊழியர்களை வைத்து தூர்வாரப்படும். இந்நிலையில் கோவில் குளங்களில் மீன் வளர்க்க உள்ளோம்” என்று கூறினார்.
மைலாப்பூர், சித்திரக்குளத்தில் சுற்றி உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமித்தவர்கள், குளங்களில் குப்பையை கொட்டுகிறார்கள். கொதண்டராமன் குளத்தில் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளால் குளம் அசுத்தமாவதாக கூறப்படுகிறது என்றும் அவர் கூறினார்.