போராட்டத்திற்கு முன்பே மாற்றுத் திறனாளிகள் கைது; கோயம்பேட்டில் பரபரப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெளி மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த மாற்றுத் திறனாளிகளை அங்கு வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெளி மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த மாற்றுத் திறனாளிகளை அங்கு வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

author-image
WebDesk
New Update
disabled

ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். கோட்டையை நோக்கிச் செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

சென்னை சேப்பாக்கம் எழிழகத்தில் நடைபெற இருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து வந்த மாற்றுத் திறனாளிகளை பேருந்து நிலையங்களில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: