Advertisment

வேட்பு மனுத் தாக்கல்; 5 பேருக்கு மட்டுமே அனுமதி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் பறக்கும் படையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
vishal, rk nagar, aiadmk, 145 nominations filed, by election, aiadmk, 107 nominations in final day

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் பறக்கும் படையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

வேட்பு மனுக்களானது காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும். மனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீ.-க்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

தொடர்ந்து மனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment