சென்னை புளியந்தோப்பு மன்னார் சாலை பகுதியை சேர்ந்த அமீர் என்பவரது மகன் ஜாகிர். இவருக்கு வயது 17. இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் 5 நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜாகிருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நண்பர்கள் அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனுக்கு போதை ஊசியை வாங்கி கொடுத்தது புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், அவருக்கு போதை ஊசியை விற்பனை செய்தது கொருக்குப் போட்டையைச் சேர்ந்த செல்வி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.