/indian-express-tamil/media/media_files/2025/05/27/mjjJUFU7T7d9w62oQwbz.jpg)
சுமார் 70 அடி உயர ராட்சத ராட்டினத்தில் 30 பேர் சிக்கிக் கொண்டனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 70 அடி உயர ராட்சத ராட்டினத்தில் 30 பேர் சிக்கிக் கொண்டனர். 3 மணி நேரமாக அந்தரத்தில் சிக்கித் தவித்த 30 பேர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட இந்த கோளாறால், அதில் பயணித்த மக்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராட்டினத்திலேயே தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.
ராட்சத ராட்டினத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க கிரேன் உதவியுடன் பணிகள் நடைபெற்றது. நீண்ட நேரமாகியும் ராட்சத ராட்டினத்தில் சிக்கியிருப்பவர்கள் சோர்வடைந்துள்ளனர். இருப்பினும், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மிகவும் கவனமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். 3 மணி நேரமாக அந்தரத்தில் சிக்கித் தவித்த 30 பேர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வி.ஜி.பி பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. தொழில்நுட்பக் கோளாறுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ராட்சத ராட்டினத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.