Advertisment

இ.சி.ஆர்., சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல்

கிழக்கு கடற்கரை சாலை சுங்கச்சாவடி ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
toll plaza

Tamil Nadu toll plazas

கிழக்கு கடற்கரை சாலை சுங்கச்சாவடி கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடியிலும், திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடியிலும் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்திற்கு செல்லும் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு ஒருவழிப் பயணத்திற்கு ரூ.47, ஒரு நாளில் திரும்ப ரூ.70, பலமுறை பயணம் செய்ய ரூ.128, மற்றும் மாதக் கட்டணம் ரூ. 2,721; இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு, மினி வேன்களில் பயணம் செய்ய ஒரு வழி பயணத்திற்கு ரூ. 75 மற்றும் ஒரு நாள் திரும்பும் பயணத்திற்கு ரூ.113 கட்டணம் என்ற பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் மற்றும் இரு சக்கர சரக்கு வாகனங்களுக்கு ஒருவழிப் பயணத்திற்கு ரூ.157 மற்றும் ஒரு நாளில் திரும்ப ரூ.236 வசூலிக்கப்படும். முச்சக்கர வர்த்தக வாகனங்கள் ஒரு பயணத்திற்கு ரூ.172 மற்றும் அதே நாளில் திரும்புவதற்கு ரூ.258.

4 சக்கர மற்றும் 6 சக்கர சரக்கு வாகனங்களுக்கு ரூ. 247 ஒருவழிப் பயணமும், அதே நாளில் திரும்புவதற்கு 370. கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் (7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள்) ஒரு பயணத்திற்கு ரூ.301 மற்றும் ஒரே நாளில் சுற்றுப்பயணத்திற்கு ரூ.451 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Toll Gate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment