Advertisment

சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரம் அதிகரிப்பு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரம் அதிகரித்துள்ளது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Egmore - Guruvayur Express 16127, Train Time increased Tamil News

நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் பயண நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16127 நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அவ்வகையில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 9 மணிக்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 9.45 மணிக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திருச்சிக்கு பிற்பகல் 2 மணிக்கு பதில் 3 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர், மதுரை சந்திப்புக்கு மாலை 4.25-க்கு பதிலாக 5.40 மணிக்கு வந்து சேர்ந்தது.

Advertisment

நாகர்கோவில் சந்திப்புக்கு இரவு 9.20-க்கு பதிலாக 10.25 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 10.30 மணிக்கு புறப்பட்டது. இரணியலுக்கு 9.49-க்கு பதில் 10.50-க்கு வந்து 10.51-க்கும், குழித்துறையில் 10.05-க்கு பதில் 11.07-க்கு வந்து 11.09-க்கும், இரவு 11.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்வதற்கு பதிலாக 12.20 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

publive-image

மேலும் காலை 6.40-க்கு செல்வதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக காலை 7.40-க்கு குருவாயூர் சென்றடையும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரயில் பயணிக்கும் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கேரளாவிலும் இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக குருவாயூர் சென்று சேரும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

publive-image

இது குருவாயூர் செல்லும் பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. ரயில்வே துறை நாளுக்கு நாள் ரயில்களின் வேகத்தை அதிகரித்தும், பயண நேரத்தை குறைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தை அதிகரிக்க செய்திருப்பதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் இயக்கத்திற்காக பயண நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Kerala Train Egmore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment