New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/madras-HC.jpg)
மரங்கள் வெட்டப்படுவதை கைவிடக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பசுமைத் தாயகம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு விடுக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன முறையில் விரிவுபடுத்த கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த பணிகளின் போது மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு முறையீடு செய்ததை அடுத்து, அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா அடங்கிய அமர்வு அனுமதியளித்தது.
மரங்கள் வெட்டப்படுவதை கைவிடக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பசுமைத் தாயகம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.