தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: மின்சார ரயில் சேவை மாற்றங்கள்

பயணிகளின் வசதிக்காக, ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 18 வரை வார நாட்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதிக்காக, ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 18 வரை வார நாட்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Chennai suburban trains .jpg

Chennai suburban train timings

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 18 முதல், எழும்பூரில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் ஐந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் (கொல்லம், மதுரை, மன்னார்குடி, திருச்செந்தூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களுக்கு) தாம்பரத்தில் இருந்து இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக, ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 18 வரை வார நாட்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
 
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது:

Advertisment

தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில்:

தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், இனி அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்குச் செல்லும்.

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்:

Advertisment
Advertisements

கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், இனி அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்:

செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்:

கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், இனி காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்:

கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், இனி மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்:

கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், இனி மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்.

அரக்கோணம் - கடற்கரை மின்சார ரயில்:

அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

ஞாயிற்றுக்கிழமை சேவைகளில் மாற்றம் இல்லை:

மேற்கண்ட ரயில் சேவை மாற்றங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கூடுதல் சிறப்பு மின்சார ரயில் சேவை:

பயணிகளின் வசதிக்காக, சென்னை கடற்கரை - தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரைக்கும், மறுமார்க்கமாக கடற்கரையில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: