பயணிகள் கவனத்திற்கு..! சென்னையில் இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் ரத்து; சிறப்பு ரயில்கள் இயக்கம்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமான மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Chennai


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் ஏராளமான பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இன்றும் (ஜூலை 27), நாளையும்  (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் நேற்று வரை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு மாற்றாக ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்புகள் ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.

இதேபோல, கூடுவாஞ்சோியிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சோிக்கு இரவு 11 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. மேலும் 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை பகல் நேர மின்சார ரயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: