சென்னை மின்சார ரயில் நேர மாற்றம்; இன்று முதல் அமல்- விவரங்கள் இதோ!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் பாதைகளில், வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் பாதைகளில், வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Western Railway to add 11 non-AC local train services starting April 5

இந்தச் சேவைகள் ஏப்.5ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன.

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

Advertisment

சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டைக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 25ம் தேதி வரை, ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

  • மூர் மார்க்கெட் மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆகியவை முற்றிலும் ரத்து செய்யப்படும்.
  • பட்டாபிராம் மிலிட்டரி - சென்னை சென்ட்ரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி-சென்ட்ரல் இடையேயும், இரவு 11.30 மணிக்கு சென்ட்ரல்-ஆவடி இடையேயான மின்சார ரயில் மற்றும் சென்ட்ரல்-வியாசர்பாடி இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
  • கும்மிடிப்பூண்டி-சென்ட்ரல் இடையே அதிகாலை 4.50 மணிக்கு பேசின் பாலம் மற்றும் சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மின்சார ரயில், சென்ட்ரல் - குமிடிப்பூண்டி இடையே காலை 6.25 மணிக்கு சென்ட்ரல் மற்றும் பேசின் பாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • சூலூர்பேட்டை - சென்ட்ரல் இடையே காலை 5 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
  • பேசின் பாலம் - சென்ட்ரல், சென்ட்ரல் மற்றும் சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கும், சென்ட்ரல் - பேசின் பாலம் 9.45 மணிக்கும், சூலூர்பேட்டை மற்றும் சென்ட்ரல்- கொருக்குப்பேட்டை இடையே இரவு 9.45 மணிக்கும் புறப்பட்டு, இடையே ரத்து செய்யப்படுகிறது.
  • சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.
  • சென்ட்ரல்- ஆவடி இடையே இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படும்.
  • சென்ட்ரல்- ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு, சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Southern Railway Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: