பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் காலை 8 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், இந்த சோதனையானது தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil