/tamil-ie/media/media_files/uploads/2023/07/train-7-1-1-4.jpg)
சென்னை - எண்ணூர் மார்க்கத்தில் அதிநவீன மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால், அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டடால், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி வயரில் சிக்கியதால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை 1 மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இன்று (27.03.2025) 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி ரயில் இன்ஜின் மட்டும் தனியாக சென்று கொண்டிருந்தபோது அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திற்கும் எண்ணூர் ரயில் நிலையத்திற்கு இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி மின் ஒயரில் சிக்கியதால் எஞ்ஜின் செல்ல முடியாமல் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அத்திப்பட்டு புதுநகர் அத்திப்பட்டு என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் புறநகர் ரயில்கள் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மின்சார வயரில் சிக்கிய என்ஜினில் மின்கடத்தும் கம்பியை ரயில்வே ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அப்புறப்படுத்தியதை தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், ரயில் பயணிகள் அவதி அடைந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.