/indian-express-tamil/media/media_files/2025/05/21/VbdKwUk99JKT1ntqvJoV.jpg)
சென்னையில் இனி 5 வகை விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்.. என்னென்ன தெரியுமா?
சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் மடக்கி அபராதம் வசூலித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையை கண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதும் நடப்பதுண்டு. மேலும் கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை காவல்துறையினர் விரட்டி பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது இனி, வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் செல்லுதல் ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.