கனமழை காரணமாக சென்னைக்கு வரவிருந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
மேலும் கனமழையின் காரணமாக, சென்னைக்கு வரவிருந்த துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா ஆகிய நாடுகளின் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ., மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ ., மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil