மழை பாதிப்பு: உதவிக் கரம் நீட்டிய சூர்யா, கார்த்தி: இவ்வளவு தொகையா? ரசிகர்கள் பாராட்டு

சென்னையில், வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவ நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் வழங்க உள்ளனர்.

சென்னையில், வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவ நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் வழங்க உள்ளனர்.

author-image
WebDesk
New Update
sada

சென்னையில்,  வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவ நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் வழங்க உள்ளனர்.

Advertisment

மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், படூர் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளது. சென்னையில் 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனர். மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்டு வருகின்றனர். கூதலாக 2 மீட்பு குழுவினர் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ. 10 லட்சம் வழங்க நடிகர் சூர்யா, கார்த்தி முன்வந்துள்ளனர். இவர்களது ரசிகர் மன்றம் வழியாக இந்த தொகையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகையானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நெட்டீசன்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: