Advertisment

ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு 'U டர்ன்': ஆலந்தூர் டு கிண்டி பயணிகள் மகிழ்ச்சி

சென்னை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆலந்தூர் டு கிண்டி பயணிகளுக்கு உதவும் வகையில் ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு யு-டர்ன்

author-image
WebDesk
New Update
ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு 'U டர்ன்': ஆலந்தூர் டு கிண்டி பயணிகள் மகிழ்ச்சி

Chennai GST road gets another U turn opposite Alandur Post Office: சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூரில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில், ஆலந்தூர் தபால் நிலையம் எதிரே புதிய யு-டர்ன் பாதையை போக்குவரத்து போலீசார் திறந்துள்ளனர்.

Advertisment

சென்னையின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்று ஜி.எஸ்.டி சாலை. தென்மாவட்டங்களில் இருந்து வருவோர் பயன்படுத்தும் சாலையாக இது இருப்பதோடு, சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து விமானநிலையம் செல்லும் சாலையாகவும், தாம்பரம், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினசரி வேலைக்கு வருவோர் பயன்படுத்தும் சாலையாகவும் இந்த ஜி.எஸ்.டி சாலை உள்ளது. இதனால் இந்த சாலை எப்போது போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர்களே – பா.ஜ.க

இதனிடையே, ஆலந்தூர், நங்கநல்லூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து கிண்டி வருவோரும் இந்த சாலையை பயன்படுத்துவர். ஆனால், அவர்கள் யு-டர்ன் எடுக்க சிரமமாக இருந்தது.

இந்தநிலையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், புதிய யு-டர்ன் பாதையை ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து போலீசார் திறந்துள்ளனர். மெட்ரோ ரயில் பாதையின் கீழ் ஏற்கனவே யு-டர்ன் இருந்து வருகிறது, அங்கு விமான நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலை வழியாக வரும் வாகனங்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

இப்போது, ​​செயின்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) போக்குவரத்து அமலாக்கப் பிரிவு மேலும் ஒரு யு-டர்ன் கொண்டு வந்து, எதிரெதிர் திசைகளில் வரும் வாகனங்கள் குழப்பத்தைத் தவிர்க்க தனி யு-டர்ன்களை வைத்திருப்பதை உறுதி செய்துள்ளது. பெரும்பாலான பயணிகளுக்கு புதிய ஏற்பாட்டைப் பற்றி தெரியாததால், தற்போது, ​​புதிய யு-டர்ன் சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

40மீ அகலம் கொண்ட யு-டர்ன், சில மீடியன் தடுப்புகளை அகற்றிய பிறகு, கனரக வாகனங்கள் வசதியாகத் திரும்புவதற்கு போதுமான இடம் உள்ளது. இந்த புதிய ஏற்பாடு ஆலந்தூர், வேளச்சேரி, நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து கிண்டி நோக்கி வரிசையாக நிற்கும் வாகனங்களுக்கு சீரான போக்குவரத்தை உறுதிப்படுத்த உதவும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், போக்குவரத்து தெற்கு இணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் உத்தரவுப்படி, மூன்று நாட்கள் சோதனைக்கு பின், ஜூலை, 27ல் இந்த யு-டர்ன் நிரந்தரமாக திறக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment