/indian-express-tamil/media/media_files/2025/02/24/bPp4um0S2C6D8WWH6bRO.jpg)
ஞானசேகரன் குற்றவாளி: ஜூன் 2ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிச.23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பல்கலைக்கழக வளாகத்திலே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரித்தது. இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (புதன்கிழமை) வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாணவி புகாரளித்து 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில்,சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். இதன்படி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டும் என்றும், தண்டனை விவரம் வெளியாகும் வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். கைதான ஞானசேகரன் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
May 28, 2025 15:19 IST
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு: கனிமொழி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க 6.5 ஆண்டுகள் ஆனது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும் என கனிமொழி கூறியுள்ளார்.
-
May 28, 2025 13:44 IST
ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பு - தமிழிசை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், 5 மாதங்களில் இதன் விசாரணை நிறைவடைந்தது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
May 28, 2025 13:02 IST
மாணவி பாலியல் வழக்கு; 5 மாதங்களில் நீதியை பெற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி - ஸ்டாலின்
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், 5 மாதங்களில் நீதி கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து, "சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும், மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!
காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: 'குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!'.
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
May 28, 2025 12:49 IST
நீதிக்காக போராடிய மாணவிக்கு கிடைத்த வெற்றி - நயினார் நாகேந்திரன்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லை சம்பவத்தில் சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்காக தொடர்ந்து போராடிய மாணவிக்கு கிடைத்து வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
May 28, 2025 12:10 IST
ஞானசேகரன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறேன் - அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் வரவேற்பதாக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், "பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
May 28, 2025 11:38 IST
“யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?” - இபிஎஸ்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை; மிகமிக முக்கியமான இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த சார் என்ற கேள்சி இன்னும் அப்படியே இருக்கிறது. யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால் அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
May 28, 2025 11:25 IST
“கருணை காட்டக்கூடாது”
அண்ணா பல்கலைக்கழக் மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் கதறி அழுதுள்ளார். பின் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வேண்டுமென அவர் கோரிக்கை வைத்த நிலையில் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும். கருணை காட்டக்கூடாது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி வாதிட்டுள்ளார்.
-
May 28, 2025 11:02 IST
“குறைந்தபட்ச தண்டனை வேண்டும்”
என் அப்பா இறந்துவிட்டார்.நிறைய கடன் உள்ளது. அம்மாவையும் சகோதரியையும் மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். என் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும் என குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின் ஞானசேகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
-
May 28, 2025 10:52 IST
ஜூன் 2 தண்டனை விவரம் அறிவிப்பு
ஞானசேகரனுக்கு ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
May 28, 2025 10:49 IST
11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபணம்
ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம் கூறியுள்ளது.
-
May 28, 2025 10:43 IST
ஞானசேகரன் தான் குற்றவாளி
ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் என்ன என்று இன்னும் சற்று நேரத்தில் நீதிபதி ராஜலட்சுமி வாசிக்க உள்ளார்.
-
May 28, 2025 10:41 IST
இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நீதிபதி சம்பவத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபணம் ஆகி விட்டது. ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 28, 2025 10:38 IST
நீதிபதி ராஜலட்சுமி வருகை
சற்று நேரத்தில் ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில் நீதிபதி ராஜலட்சுமி நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். ஞானசேகரன் வழக்கறிஞர் கோதண்டராமனும் வருகை தந்துள்ளார்.
-
May 28, 2025 10:15 IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதை அடுத்து சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்படுகிறார்.
-
May 28, 2025 10:02 IST
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசேகரன்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. புழல் சிறையில் இருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு ஞானசேகரன் அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
May 28, 2025 10:01 IST
வழக்கு விசாரணை
பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மே 28 வழங்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பிக்க உள்ளார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் 5 மாதத்திற்கு பிறகு இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
கைதான ஞானசேகரன் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
May 28, 2025 10:01 IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரித்தது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
-
May 28, 2025 09:58 IST
வழக்கின் பிண்ணனி
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவி சக மாணவருடன் டிசம்பர் 23 அன்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்து இருந்தார்.
-
May 28, 2025 09:58 IST
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
-
May 28, 2025 09:22 IST
தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு..!
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனை அவரது தரப்பு மறுத்துள்ளது.
-
May 28, 2025 09:06 IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 23யில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி புகார் அளித்து இருந்தார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் 5 மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை, மிரட்டல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் கைதான ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
May 28, 2025 09:04 IST
ஞானசேகரன் வழக்கில் இன்று காலை தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.