மருத்துவர் மீதான தாக்குதல்: இன்று என்னென்ன மருத்துவ சேவைகள் ரத்து

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்தி குத்து நடந்த நிலையில் அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

author-image
WebDesk
New Update
doctors protest

இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாய்க்கு முறையான மருத்துவம் பார்க்கவில்லை எனக்கூறி விக்னேஷ் என்ற இளைஞர், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (நவம்பர் 14) ஈடுபடுகின்றனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்  கூறுகையில், “மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இன்று (நவ. 14) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவசர சிகிச்சையை தவிர்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் உள்ளிட்டவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்காது.

Advertisment
Advertisements

மருத்துவர் மீதான கடுமையான தாக்குதலை கண்டிக்கவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கவும், வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வலியுறுத்தவும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.

இந்நிலையில் பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, அரசு மருத்துவர் சங்கங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.  இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

ஆனால், தாக்குலை கண்டித்து  தமிழகத்தில் இன்று (நவ.14) 45,000 மருத்துவர்கள் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் என அகில இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்திருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிவதாக தெரிவித்துள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Strike Doctor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: