Advertisment

சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து

சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மார்ச் 21, 23, 24 தேதிகளில் மீஞ்சூருடன் நிறுத்தப்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Train services hit for 45 days, Corporation work storm-water drain Tamil News

Chennai

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொன்னேரி-மீஞ்சூா் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சேவையில் 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்ட்ரலில் (மூா் மார்க்கெட் வளாகம்) இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9, காலை 10.35 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் மார்ச் 20 முதல் 24 ஆம் தேதி வரை மீஞ்சூருடன் நிறுத்தப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மார்ச் 21, 23, 24 தேதிகளில் மீஞ்சூருடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கமாக கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.55 மற்றும் காலை 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மீஞ்சூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும்.

மேலும், சூலூா்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மார்ச் 21, 23, 24 தேதிகளில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment