சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் பிப்ரவரி 13-ம் தேதி 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் வியாழக்கிழமை (13.02.2025) 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்திருப்பதாவது:
“பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (13.02.2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.” என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.