மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விபரங்களை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் வருமான வரித்துறைக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டுமென அ.தி.மு.க-வைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்து ‘ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதாக தெரிவித்தருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு, கடன்கள் எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய விபரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே சொத்து விபரங்களை தாக்கல் செய்ய, வருமான வரித்துறைக்கு ஏப்ரல் 25 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.