/indian-express-tamil/media/media_files/2025/08/09/pmk-balu-press-meet-2025-08-09-06-52-08.jpg)
பொதுக்குழுவைப் பொறுத்தவரை நிறுவனர் மருத்துவர் ஐயா அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த கூட்டம் நடத்துவதற்கான அழைப்பிதழை அவருக்கு அனுப்பியிருக்கிறோம். நாளை அவர் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். நாளைய தினம் கட்சியின் செயல்ல்பாடுகள் குறித்து விவாதிக்க இருக்கிறோம் என்று வழக்கறிஞர் பாலு கூறினார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டும் அக்கட்சியின் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, “பொதுக்குழுவைப் பொறுத்தவரை நிறுவனர் மருத்துவர் ஐயா அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த கூட்டம் நடத்துவதற்கான அழைப்பிதழை அவருக்கு அனுப்பியிருக்கிறோம். நாளை அவர் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். நாளைய தினம் கட்சியின் செயல்ல்பாடுகள் குறித்து விவாதிக்க இருக்கிறோம்” என்று கூறினார்.
பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுகும் அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருவருக்கொருவர் பா.ம.க-வில் இருந்து நிர்வாகிகளை நீ்க்கி, வேறு நிர்வாகிகளை நியமிப்பதும் நடந்தது. இதைத் தொடர்ந்து, டாக்டர் ராமதாஸ், அன்புமணியை செயல்தலைவராக இருப்பார் என்று அறிவித்தார்.
இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் பா.ம.க பொதுக்குழு மகாபலிபுரத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி கூடும் என்று அறிவித்தார். இந்த பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி, டாக்டர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க பொதுச்செயலாளர் முரளி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மத்தியஸ்தம் செய்ய இருவரையும் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை அன்புமணி ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வந்தார். அவரிடம் தனி அறையில் நீதிபதி பேசினார். அதே போல, டாக்டர் ராமதாஸ் உடல்நலப் பிரச்னையால் வரமுடியாததால் காணொலி வழையாகப் பேசினார் என்ற தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, பா.ம.க பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பா.ம.க பாலு, “இந்த வழக்கு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை; இந்த வழக்கு தாக்கல் செய்ததே சட்டவிரோதமானது. இது சிவில் வழக்காகத்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று நாங்கள் முறையிட்டோம். அதே போல், இந்த வாக்கை தாக்கல் செய்த மனுதாரர், பா.ம.க பொதுக்குழுவால் முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. அவர் நியமனம் செய்யபட்டவர் என்று நாங்கள் எடுத்து தெரிவித்தோம்.
அதே போல, பா.ம.க பொதுக்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் என்பது பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது. இன்றைக்கும் வடிவேல் ராவணன்தான் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். பொதுக்குழுவுக்கு தலைமை தாங்குகிற அதிகாரம் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மட்டும்தான் இருக்கிறது. பொதுக்குழுவைப் பொறுத்தவரை நிறுவனர் மருத்துவர் ஐயா (டாக்டர் ராமதாஸ்) அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த கூட்டம் நடத்துவதற்கான அழைப்பிதழை அவருக்கு அனுப்பியிருக்கிறோம். நாளை அவர் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். நாளைய தினம் கட்சியின் செயல்ல்பாடுகள் குறித்து விவாதிக்க இருக்கிறோம்” என்று வழக்கறிஞர் பாலு கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.