Advertisment

லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்.ஐ.ஆர்.களை இ.டி-யிடம் வழங்க உத்தரவிட முடியாது  - ஐகோர்ட்

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை அமலாக்கத்துறையிடம் வழங்க எந்த சட்ட பிரிவிலும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அவற்றை வழங்க உத்தரவிட முடியாது என்று  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

author-image
WebDesk
New Update
Chennai

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத்துறையிடம் வழங்க எந்த சட்டப்பிரிவும் அனுமதி வழங்கவில்லை. எனவே, அவற்றை வழங்க உத்தரவிட முடியாது  என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Advertisment

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் ஆர்.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். அதில்; ஊழலுக்கு எதிராக 2020-21-ல் மட்டும் 553 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது. 

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. பல வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். கிடைக்காததால் அமலாக்கத்துறையால் வழக்கை நடத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் வழக்கு விவரங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரி இருந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள எஃப்.ஐ.ஆர்-களை அமலாக்கத்துறைக்கு வழங்கும்படி உத்தரவிட முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை அமலாக்கத்துறையிடம் வழங்க எந்த சட்ட பிரிவிலும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அவற்றை வழங்க உத்தரவிட முடியாது என்று  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment