Advertisment

அண்ணாமலை பல்கலையில் மாற்றப்பட்ட 4,450 பணியாளர்கள்.. மீண்டும் அங்கேயே நியமிக்க ஐகோர்ட் உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்றப்பட்ட ஆசியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 4,450 பேரை மீண்டும் அதே பல்கலைக்கழகத்திலேயே நியமிகக் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  

author-image
WebDesk
New Update
madras hc

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாற்றப்பட்ட ஆசியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 4,450 பேரை மீண்டும் அதே பல்கலைக்கழகத்திலேயே நியமிகக் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், உபரி பணியாளர்கள் எனக்கூறி அரசின் பல்வேறு துறைகளுக்கும் கல்லூரிகளுக்கும் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்ட ஆசியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 4,450 பேரை மீண்டும் அதே பல்கலைக்கழகத்திலேயே நியமிகக் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  

Advertisment

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் உபரி பணியாளர்கள் எனக் கூறி பதவி இறக்கம் மற்றும் ஊதிய குறைப்பு செய்யப்பட்டு அரசின் வேறு துறைகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டனர். 3 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவர்கள் அந்த இடங்களிலேயே வேலை செய்து வந்தனர். இந்நிலையில், அப்படி மாற்றப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 4 ஆயிரத்து 450 பேரை மீண்டும் பழையபடி பழைய சம்பளத்தில் பல்கலைக்கழகத்திலேயே 4 வாரங்களில் நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிர்வாககுளறுபடிகளால் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக அந்தப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நிர்வகித்து வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பணியில் இருந்த உபரி பணியாளர்கள் இருந்தனர். அதனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 1,204 ஆசிரியர்கள் மற்றும் பிரிவு அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகள், மண்டல அதிகாரிகள் மற்றும் வடிவமைப்பாளர்களாக பணியாற்றி வந்த 3,246 ஆசிரியரல்லா பணியாளர்களை உபரி பணியாளர்கள் எனக்கூறி கடந்த 2016 முதல் 2020 காலகட்டத்தில் சிலரை அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே உதவிபிரிவு அலுவலர்கள், ஆய்வக உதவியாளர்கள், பதிவு எழுத்தர்கள், தட்டச்சர்கள், உதவியாளர்கள் போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அதே போல, பலரை பொதுப்பணித்துறை, வேளாண் துறை, பிற அரசு கல்லூரிகள் மற்றும் அரசின் பிற இதர துறைகளுக்கும் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பதவி குறைப்பு மற்றும் ஊதிய குறைப்பு செய்து தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உத்தரவிட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ், இப்படி வேறு துறைக்களுக்கு மாற்றி உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமானது என்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். 

நீதிபதி எம்.எஸ். ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “அண்ணாமலை பல்கலை.யில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து எந்த வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில், உபரி பணியாளர்கள் எனக்கூறி எந்த அடிப்படையில் மனுதாரர்கள் பதவி குறைப்பு, இடமாற்றம் மற்றும் ஊதிய குறைப்பு செய்யப்பட்டனர் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை, எந்தவொரு விசாரணையுமின்றி 4,450 பேரை பதவி குறைப்புடன், ஊதிய குறைப்பும் செய்து அரசின் வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது.

அரசின் இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தையும் ஏற்க வேண்டியுள்ளது. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உபரி பணியாளர்கள் எனக் கூறி பதவி குறைப்பு, ஊதிய குறைப்பு, இடமாற்றம் செய்யப்பட்ட 4,450 பேரையும் மீண்டும் பழையபடி பழைய ஊதியத்தில் பல்கலைக்கழகத்திலேயே 4 வார காலத்தில் நியமிக்க வேண்டும்.

ஒருவேளை பழைய பதவிகள் தற்போது இல்லை என்றாலும் அதற்கு தகுதியான பதவிகளை உருவாக்கி இவர்களை பணியமர்த்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment