Advertisment

சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு; அனைத்து அனுமதி வழங்கப்படும் - மத்திய அரசு பதில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் உயிரிழந்த நிலையில், அவருடைய உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
HC Santhan 1

சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வந்தவர்களை உச்ச நீதிமன்றம் கடந்த 12.11.2022-ல் விடுதலை செய்தது. அவர்களில் ஒருவரான சாந்தன் (55) இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் வெளிநாட்டு கைதிகள் சிறை வைக்கப்படும் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

Advertisment

சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி வந்த நிலையில், அண்மையில், அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்தது. இதனால் இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 24-ம் தேதி தெரிவித்தார். 



இதனிடையே, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து வந்த, சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் கல்லீரல் பிரச்னை காரணமாக அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், கடந்த ஜனவரி 27-ம் தேதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், சாந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை (28.02.2024) சிகிச்சை பலனின்றி காலமானார். 

சாந்தன் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உயிருடன் இருந்தபோது,  இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால், அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும் என்றும் தன்னை  இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, சாந்தன் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு பதிலளித்தது.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அடுத்த விசாரணையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்க்கப்படுவதறு முன்னாதாக, மாரடைப்பு ஏற்பட்டு பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். 

இந்நிலையில், சாந்தன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (29.02.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு இருவரும், சாந்தனை இலங்கை அனுப்ப எப்போது அனுமதி வழங்கப்பட்டது என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். கடந்த ஜனவரி 22-ம் தேதியே சாந்தன் இலங்கை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள்,  “மத்திய அரசு ஜனவரி 22-ம் தேதியே அனுமதி அளித்த பிறகும் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை” என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர்,  “ஜனவரி 24-ம் தேதி முதலே சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால், நடக்க கூட முடியவில்லை என்பதற்காகவே இலங்கை அனுப்ப முடியவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,  “சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தூதரக அனுமதி ஆவணம் உள்ளிட்ட அனைத்து அனுமதியும் உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Santhan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment