New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z951.jpg)
கோவையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள் மற்றும் கட்-அவுட்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், பேனர்கள் தொடர்பான உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 27-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், கோவையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள் மற்றும் கட்-அவுட்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. கோவை நிகழ்ச்சிக்காக மேற்கொண்டு பேனர்கள் எதுவும் வைக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், கோவை பொறியாளர் ரகு உயிரிழந்ததற்கு, சாலையில் வைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவுகளே காரணம் என தெரிகிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அலங்கார வளைவு தான் காரணம் என்றாலும், மரண விவகாரத்திற்குள் செல்ல விரும்பவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.