Advertisment

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த கோரி வழக்கு: அரசின் அதிகாரம் - உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் அமைப்பின் தலைவர் எம். முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவில், தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே அடிப்படை வசதிகள் இல்லாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், அரசின் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அனைவருக்கும் சமமாக சென்றடையும் என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். 

அதனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக அரசிடம் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் அமைப்பின் தலைவர் எம். முனுசாமி தாக்கல் செய்த இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரவரம்புக்கு உட்பட்டது என்பதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டது.

மேலும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அரசுக்கு மனு அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக அரசை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment