Advertisment

மின்வாரிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல்; ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு; தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
chennai hc

தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தலை நடத்த அதிகாரியை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக ஷாஜகான் என்பவரும், பொதுச்செயலாளராக சம்பத் என்பவரும், பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தங்கள் செயல்பாட்டில் தலையிட பழைய நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரியும், தங்கள் தேர்தலை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரியும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கூட்டமைப்பின் சட்ட திட்டங்களில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், இருதரப்பினரும் அந்த குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கும், கூட்டமைப்பை நிர்வகிக்கவும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madras High Court tneb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment