Advertisment

ஃபார்முலா கார் பந்தயம்; மேலும் ஒரு வழக்கு - ஐகோர்ட் ஒப்புதல்

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai High Court approve another petition against formula 4 car racing high court tamil news

இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது

Chennai-high-court | tamil-nadu-government: பார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. 

Advertisment

இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்தப் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். 

இந்த பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் தலைமையிலான அமர்வில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும், 'இந்த பந்தயத்தை நடத்துவதற்கான உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் ஒரு வழக்கு 

இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலுசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பந்தயம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை என்றும், அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai High Court Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment